Monday, May 23, 2011

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்



கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

உன் மூச்சு காத்து வந்துதான்
என் மூச்சு காத்த தீண்டுதே
வழியெல்லாம் வானவில்ல தருதே

நீ என்ன பாக்கும் போதிலும்
நான் உன்ன பாக்கும் போதிலும்
நெஞ்சோடு கோடி மின்னல் வருதே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

இன்பமிங்கே

என்னென்னவோ ஆசைகள் உள்ளுக்குள்ளே சேர்க்குற
அத்தனையும் சொல்லிவிட தனிமைய கேக்குற
அறுபட்ட கோழிய போல் சுத்தி சுத்தி துடிச்சேனே
கண்ணுமுழி மூக்கு எல்லாம் மொத்தமாக வேர்த்தேனே
ஒரு வரத்தை பேச நெனைக்கிறேன் எதனாலோ தவிசி நிக்கிறேன்
உதட்டோடு ஒளிச்சி வைக்கிறேன் ஆசையத்தானே

எதிர் காத்தில் ஆத்தை போலவே
உன்னை பாத்து சரிஞ்சு நிக்குறேன்
உன் காதல் வரத்தை கேட்கிறேன் தினம் தினம் தினம் நானே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

பென்மனசு ஆழமுன்னு சொன்னவங்க யாருங்க
உண்மையிலே ஆண்மன்சு அதைவிட ஆழங்க
என்ன்விட்டு தள்ளி நின்னா விட்டு விட மாட்டேனே
உன் மனசு தல்லையின்னா தட்டி தட்டி திறப்பேனே
சொல்லாத காதல் என்பது செல்லாத காச போலது
சொன்னாதான் காதல் வேகத்தில் மழை வந்து குதிக்கும்
மலைமேலே பூக்கும் பூவத்தன் மறச்சாலும் வாசம் தெரியுமே
மனசோரம் காதல் வந்துட்டா கண்ணில் அது தெரியும்

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

உன் மூச்சு காத்து வந்துதான்
என் மூச்சு காத்து தீண்டுதே
வழியெல்லாம் வானவில்ல தருதே

நீ என்ன பாக்கும் போதிலும்
நான் உன்ன பாக்கும் போதிலும்
நெஞ்சோடு கோடி மின்னல் வருதே

கனவா நெசமா என்ன கில்லி கில்லி பாக்குறேன்
அடடா நெசந்தான் மெல்ல மொட்டு விட்டு பூக்குற

இனிமையான பாடல் மைதானம் படத்திலிருந்து.

- குருவின் இன்பமிங்கே

Kadhal Oru
Kanava Nesama
Kandom Kandom
Love Theme
Maithaanam Maidhanam

Tuesday, May 10, 2011

எத்தனை பெண் கவிகர்கள் இருக்கிறார்கள் தமிழ் திரை உலகத்தில்?

எத்தனை பெண் கவிகர்கள் இருக்கிறார்கள் தமிழ் திரை உலகத்தில்?

பல பாடல்களை கேட்டிருக்கிறேன்
பல பாடல்கள் பெண்கள் பாடுகின்றனர்
எழுதியதோ ஆண் வர்க்கம் என்று
எல்லோர்க்கும் தெரியும்

அவர்கள் அன்றி ஏதும் அசையாது
அவர்கள் அன்றி உலகம் இல்லை
அவர்கள் ..... அவர்கள் ..... யார் அந்த அவர்கள்?

ஹ்ம்ம்

உண்மையில் புலவர்கள் பொய்யர்களா?

ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே ...

உண்மையை ஏன் எழுத
வெட்கம் ?

இந்த பாடல் ஒரு பெண்மணி எழுதி
இனிமையாக பாடியிருந்தால்
என்றும் ஒப்புக்கொள்வேன்

ஆனால் இன்று என்னால்
ஒப்புக்கொள்ள முடியவில்லை

அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான் தானே ...?
என்ன ஒரு மமதை ஒரு பெண்ணிடம் ?

ஆணினமே மடியும் அந்த ஆலிலங் குழியிடம்
எனும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது

மடி - எத்தனை அர்த்தம் ?
மடி - அன்னை மடியில் துயில். போதாதா என்ன ?
மடி - நீ உனை உணரவில்லை எனில் (செத்து மடி)
மடி - அவளின் மடி (ஏன் இந்த மடி மட்டும் போதை உனக்கு?) மஞ்சள் ? (ஒப்புக்கொள்ள மாட்டேன்)
மடி - அன்னை மடி தவிர பிறரை நுகரும் போது (யாரும் உண்மையில் உண்டா என்ன?)

நித்தமும்
நினைப்பேன் மடியினை
நினைப்பேன் அன்னையின் மடியினை


Guru