Wednesday, January 5, 2011

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா



சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா

மனிதனாக வாழ்த்திட வேணும மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்த்திட வேணும மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா
நீ வலது கையடா

தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டிற்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே
நீ வெம்பி விடாதே

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா

Arasilangkumari - Chinnappayale Chinna Payale Sethi Song, Lyrics and Video

A.S.A. Sami, Dr. Kalaignar Karunanidh..., G.Ramanathan, K.A. Thangavelu, M.G.Ramachandran, M.N.Nambiar, M.Somu Sundram, Padmini, Rajasulochana, S.A. Ashokan
Chinnapayale ChinnapayaleT M SoundarrajanPattukottai Kalyanasundram
Thara Avar Varuvaara
Yetramunna YetramSeergazhi Govindarajan, T M SoundarrajanPattukottai Kalyanasundram

No comments:

Post a Comment