Wednesday, April 13, 2011

கர வருட தமிழ்ப் புத்தாண்டை நினை



அன்னையை நினை
ஆயர்பாடி கண்ணனை நினை
இன்முகம் காட்ட நினை
ஈசனை நினை
உற்றாரை நினை
ஊரை நினை
என்னால் முடியும் என்று நினை
ஏமாற மாட்டேன் என்று நினை
ஐயம் இன்றி எதையும் செய்ய நினை
ஒரே ஒருவரை மட்டும் காதலிக்க நினை
ஓடி விளையாட நினை
ஔவியம் பேசாதிருக்க நினை
அஃது தமிழ்ப் புத்தாண்டையும் நினை !!!


இன்பமிங்கே குருவின்
தமிழின மக்கள் அனைவருக்கும் மனம் கனிந்த
கர வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Saturday, April 9, 2011

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை

என் அம்முவுக்காக புதுக் கவிதை விடும் தூது !!!

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை மனம்
துவழாமல் இன்னும் தேடுகிறேன்
தனிமையில் வாடும் என் அன்புக்கு
தைரியம் சொல்ல
தன்னம்பிக்கை சொல்ல வேண்டும்
தயங்கும் போதெல்லாம்

துளியும் புரியவில்லை
தூதாக யாரை அனுப்ப என்று
துயில் கொள்ள மாட்டாள்
துணை நான் இருக்கிறேன் எனும் வரை
தூதுவனை தேடுகிறேன்
துயில் கொள்ளாமல் நானும்

கிடைக்கவில்லை தூதன்!
கிடைக்குமா என தேடினேன்
கண் சிவக்கும் வரை வலை பூக்களில்!
கிடைக்குமா என தேடினேன்
கண்ணதாசனின் கவிகளில்!
கிடைக்குமா என தேடினேன்
கவிஞர்களின் படைப்புகளில்
கிடைக்குமா என கூவினேன்
குறு பறவைகளிடம்

தேடலில் கண்டேன் விடை!
தென்றலை தூது விடு என்று.
தென்றலை தூது விட்டால்
திசை மாறாமல் போய்
திண்ணமாக எனை நினைக்குகும்
திரு உருவிடம் போய் சொல்லுமா?
திக்கெல்லாம் துயிலாமல் இருப்பது என்னவள் மட்டுமா என்ன?
தென்றல் திருவிளையாடல் செய்து விட்டால்?

கிட்டியது விடை!
காக்கையை தூது விடு என்று!
கா கா என்று தானே சொல்லும் காக்கை
கண்ணே கண்ணே என்று சொல்லுமா?
காவியமே காவியமே
கட்டழகன் கண் இமைக்காமல்
காவியம் படைக்கத்தனே நினைக்கிறான்
காரணம் புரியாமல்
கோபம் ஏன்?
கொட்டியது இப்படி இருக்க
காக்கை கா கா என்று
கானம் பாடினால் நம்புவாளா கோல மயில்?
கிழவியிடம் திருடிய வடையை
கீழே போட்டாய் உனை பிறர் பகழ்ந்த போது
காக்கை வேண்டாம்

புரட்டி புரட்டி படித்தேன்
புறாவை தூது விடலாம் என்று!
புரியுமா நான் ஒருவன் தான்
புறாவிடம் தூது சொன்னேன் என்று!
பலர் சொல்லி இருந்தால்?
புலம்பிவிடாத பிறர் கூறியதை என்
புன்னகை அரசியிடம்?
புன்னகையை தொலைத்து விடுவாளே?

தேடினேன் தேடினேன்
தத்தையை தூது விடலாம் என்று!
தத்தையிடம் சொல்லிவிட்டால்
தவறாமல் சொல்லிவிடும்.
தெரு ஜோசியனிடம் கிட்டிவிட்டால்
திண்டாட்டம் எனக்குத்தான்.

நன்றாக தேடினேன்
நண்பனை தூது விடலாம் என்று!
நன்றி கெட்ட நண்பனகிவிட்டால்?
நல்ல முறையில் தூது சொல்லுவானா?
நேற்றைய நண்பன் இன்று இல்லை
நம்பிக்கையும் இல்லை நண்பனிடம்
நண்பன் நாடகமடிவிடும் காலம் இது
நன் நண்பனையே தேட முடியவில்லை இன்னும்
நான் எப்படி தேடுவேன் தூதுவனை?

புலம்பாதே என்கிறது என் மனம்.
புரிய மறுக்கிறது அவள் மனம். ஆனால்
புரிந்துவிட்டது இப்போது.
புன்னகை கொள்வாய் என்ற நம்பிக்கையில் இந்த
புலம்பலை அனுப்புகிறேன்
புதுக் கவிதை விடும் தூதாக

இப்படிக்கு
இன்பமிங்கே குரு

தேடினேன் தேடினேன் தூது சொல்ல ஒருவரை

Tuesday, April 5, 2011

நண்பன் - யாவரும் நண்பர்கள் இல்லை



அன்புள்ளம் கொண்டவர்களே,

என்னுடைய கருத்து நண்பன் ஒருவனே. அதாவது ஒரு நபர் மட்டுமே நண்பனாக இருக்க முடியும்.

எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று ஒருவன் சொன்னால் அது பொய். அதில் உண்மை இருக்காது.

என்ன ஒரு முரண்பாடு பாருங்கள்.

தோழன் வேறு, உயிர்த் தோழன் வேறா? தோழன் என்று சொல்லுங்கள்.
உண்மை வேறு, சத்தியமான உண்மை வேறா? உண்மை என்று சொல்லுங்கள்.

என்னுடைய தாய் என்றுதானே சொல்லுகிறோம். தாய்கள் என்று சொல்லுவதில்லையே.

அப்படித்தான் நண்பன் ஒருவனே.

உண்மை ஒருவரிடம் மட்டுமே சொல்ல நினைப்பவர்கள் மனிதர்கள்.

சொல்லலாம் கடவுளிடம்,
சொல்லலாம் அன்னையிடம்,
சொல்லலாம் தந்தையிடம்,
சொல்லலாம் மனைவியிடம்,
சொல்லலாம் நண்பனிடம்,

இவை எல்லாமே ஒருமைதான்.

சொல்லலாம் சகோதரனிடம் (ஒரு சகோதரன் மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் தலை உருளும் ஒரு நாளில்)
சொல்லலாம் சகோதரியிடம் (ஒரு சகோதரி மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் தலை உருளும்)
சொல்லலாம் காதலியிடம் (ஒரு காதலி மட்டுமிருந்தால். பலர் என்றல் உங்கள் பல் உடையும்),

பலரிடம் ஒருவன் உண்மை சொல்ல நினைத்தால் அவனிடம் உண்மையில்லை.

தேடிப் பார்த்தால், உங்களால் உங்கள் நண்பனை தேடுவது கடினம். இது தான் உண்மை நிலை.
அப்படியே தேடி போய் கண்டுபிடித்தாலும் அது பால்ய சிநேகிதத்தில் தான் முடியும்.

கல்லூரி பருவ நண்பர்கள் (அனைவரும் நண்பரல்ல) பருவ கால நண்பர்கள். பாதியில் மறைந்து விடுவார்கள்.

பணி பார்க்குமிடத்து நண்பர்களும் (அனைவரும் நண்பரல்ல) அப்படித்தான். பணி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

காலை மட்டும் இல்லை,
மனதையும் வாரி விட்டு போகும் நண்பர்களை
வாழ்க்கையில் சந்திப்பீர்கள்.
உங்களைப் பற்றி பிறரிடம் தூற்றும், நய வஞ்சக நண்பர்களை காணுவீர்கள்

மனது வருடும். இவனையா என் நண்பன் என்றேன் என்று.
ஆனால் தேடுங்கள். பின்னால் சென்று தேட வேண்டுமே தவிர நிகழ் காலத்தில் இருக்காதீர்கள்.

நண்பன் - நல்ல பண்புடையவன் - கடினம் இப்போது தேடித் பார்த்தால்

நான் இன்னும் தேடுகிறேன்
இள வயதில் தொலைத்த(மறந்த) என் நண்பனை.
குடியில் பழக்கமான நண்பனை அல்ல.
என் குடிலில் பழக்கமானவனை

ஏன் வேகம் என்று கேட்கலாம்.

தொடருவேன் நண்பர்களின் நயவஞ்சகத்தை கேட்கும் போது.