Tuesday, January 11, 2011

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே



திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா
உலகினை பாய் போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா அன்று
இந்திரா வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே அவள்
கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ
ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ
மறந்தாயோ நீயே
உன் தெய்வ முனிவரை காப்பதற்கென்றே
வருவாயோ நீயே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா

அந்த ரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே
கணை கொடுத்திட வேண்டும் அரக்கியின்
வாழ்வை அழிதிடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து
வாராய் திருமாலே உன்
அன்பரை எல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா

ரதங்கள் படைகள் என எழுந்து
இன்று வீறுடன் வாருங்கள்
நாரயனேனும் தலைவன் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடிவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள் இனி
வருவது வரட்டும் முடிவினை பார்ப்போமே
தேவர்கள் வாருங்கள்

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜகநாதா
வருவாய் திருமாலே
துணை தருவாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா அன்பு
திருமகள் துணியில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா

Swami Ayyappan - Thiruppar Kadalil Palli Kondaye Song, Lyrics and Video

A.V.M. Rajan, G. Devarajan, Gemini Ganesan, Kannadasan, Lakshmi, P. Subramaniam, Srividya, Thikkurissy Sukumaran Nai...
Thirupar Kadalil

No comments:

Post a Comment